ஆப்நகரம்

இலங்கையில் ஃபேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கையில் ஏற்பட்ட கலவரம் எதிரொலியாக ஃபேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Mar 2018, 10:49 pm
இலங்கையில் ஏற்பட்ட கலவரம் எதிரொலியாக ஃபேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட தடை தற்போது முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil sri lanka lifts ban on facebook after assurance from social media giant
இலங்கையில் ஃபேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்


கட்டாய மதமாற்றம் செய்வதாக கடந்த மாதம் 27ம் தேதி இலங்கையில் உள்ள அம்பாறை மாவட்டத்தில், இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் சிங்களர்கள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமிய சமூகத்தினரும் சிங்களர்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

இதனிடையே இந்த மோதலில் சிங்களர் ஒருவர் மரணமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள அமைப்பினர், இஸ்லாமிய கடைகளுக்கு தீ வைத்தும், வீடுகள் வர்த்தக நிறுவனங்களை சூறையாடி கலவரத்தில் ஈடுபட்டனர்.

கலவரம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில், கண்டி பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும், வன்முறை கட்டுப்படாமல், நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியது.

இதன் காரணமாக அதிபர் சிறிசேனா தலைமையில் நாடு முழுவதும் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் திஷ்யநாயக தெரிவித்திருந்தார்..

மேலும், கலவரத்தை தூண்டும் வகையில், சட்டவிரோத பிரசாரம் நடப்பதை கட்டுப்படுத்தவும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கலவரத்தைத் தூண்டும் வகையில் உள்ள கருத்துக்களை நீக்கப் போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்புக்கொண்டதை அடுத்து, தற்போது அதற்கு விதிக்கப்பட்ட தடை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி