ஆப்நகரம்

ராஜபக்சவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க அதிபர் சிறிசேனா மறுப்பு!

ராஜபக்சவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியை அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துள்ளார்.

Samayam Tamil 18 Nov 2018, 3:39 pm
இலங்கை நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியை அதிபர் சிறிசேன ஏற்க மறுத்துள்ளார்.
Samayam Tamil ராஜபக்சவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க அதிபர் சிறிசேனா மறுப்பு!
ராஜபக்சவுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்க அதிபர் சிறிசேனா மறுப்பு!


இலங்கையில், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவுக்கு வருகிற 19ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் ஜனவரி 5-ம் தேதி பொதுத் தேர்தல் நடத்தவும் தடை விதித்தது.

இதன் பின்னர் கூட்டப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தில், ராஜபக்ச அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் கரு.ஜெயசூரியா அறிவித்தார்.

ஆனால், வாக்கெடுப்பில் குளறுபடிகள் நடந்ததாக ராஜ பக்சவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டிய நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற்றது. இதிலும் ராஜபக்சவுக்கு தோல்வியே கிடைத்தது.

இந்த நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவையும் அதிபர் சிறிசேனா ஏற்க மறுத்துள்ளார். வாக்கெடுப்பில் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இத்தகைய சூழலில், ராஜபட்ச அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டாம் என வலியுறுத்தி, முகநூல் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்கிற்கு ரணில் விக்ரமசிங்கே நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘‘இலங்கையில் முறைகேடாக ஆட்சி அமைத்திருக்கும் ராஜபக்ச தலைமையிலான அரசிடம் எங்கள் கட்சி ஆதரவாளர்களின் விவரங்களை வெளியிட வேண்டாம்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி