ஆப்நகரம்

இந்தியாவிற்கு ஆதரவாக இப்படியொரு பேச்சு - நட்புக்கரம் நீட்டுகிறாரா ’கோத்தபய ராஜபக்ச’?

இந்தியர்களின் நலனிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் இலங்கை அரசு ஈடுபடாது என்று அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Nov 2019, 1:11 pm
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி அடைந்தது. இதையடுத்து கோத்தபய ராஜபக்ச அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.
Samayam Tamil Gotabaya Rajapaksa


இவர் ஆட்சிக்கு வந்தவுடனே தனது சகோதரரான மகிந்த ராஜபக்சவை இலங்கை பிரதமராக நியமித்து உத்தரவிட்டார். இதனால் ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளனர்.

விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததாக ராஜபக்ச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் புகார் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோத்தபய இனவெறி ஆட்டம், துப்பாக்கி முனையில் தமிழர்கள்

இந்த சூழலில் ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்திற்கு வந்தது, இலங்கையில் வாழும் தமிழர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நாட்டை பாதுகாப்பை உறுதிப்படுத்த குறிப்பிட்ட இடங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பணியில் ஈடுபட வேண்டும் என்று அதிபர் கோத்தபய உத்தரவிட்டிருக்கிறார்.

குறிப்பாக அதிபர் தேர்தலில் தங்கள் கட்சிக்கு வாக்குகள் குறைவாக கிடைத்த இடங்கள் அனைத்தும் ராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த கோத்தபய ராஜபக்ச? இலங்கை புதிய அதிபரின் பின்னணி!

இந்த வார இறுதியில் கோத்தபய ராஜபக்ச இந்தியாவிற்கு வருகிறார். இதையொட்டி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடன் இணைந்து செயல்படவே விரும்புகிறோம்.

இந்த நாடுகளில் யாருக்கும் ஆதரவான நிலையை கடைபிடிக்காமல் நடுநிலையாக இலங்கை அரசு செயல்படும். அதேசமயம் இந்தியாவின் நலன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையிலும் இலங்கை ஈடுபடாது என்று கூறியுள்ளார்.

ராஜபக்ச குடும்பத்தினர் சீனாவிடம் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்நாட்டிற்கு ஆதரவாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிரானதாக இருக்க வாய்ப்புகள் உண்டு. இப்படிப்பட்ட நிலையில் கோத்தபய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்தியாவுடன் நட்பு பாராட்ட முயல்கிறாரா என்று தோன்றுகிறது. தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளை கொத்து, கொத்தாக கொன்று குவித்ததாக குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், தற்போது நேசக்கரம் நீட்ட முயல்வதை தமிழர்கள் எப்படி ஏற்பார்கள் என்றே கேள்வி எழுகிறது.

இலங்கை: பள்ளிகளுக்குத் தமிழ்ப் பெயர்.. பல கேள்விகளை எழுப்புகிறது!

இந்த சூழலில் இந்தியா வரும் இலங்கை அதிபரிடம் ஈழத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி கோரிக்கை விடுக்க வேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

அடுத்த செய்தி