ஆப்நகரம்

இலங்கை போாில் மாயமான இளைஞா்கள்: ராணுவ தளபதியை கைது செய்ய உத்தரவு

இலங்கையில் எல்.டி.டி.இ.யுடனான போரின் போது 11 இளைஞா்கள் காணாமல் போனது தொடா்பாக இலங்கை ராணுவ தளபதியை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 3 Nov 2018, 8:51 pm
இலங்கையில் உள்நாட்டு போரின் போது காணாமல் போன 11 இளைஞா்கள் தொடா்பான வழக்கில் முக்கிய குற்றவாளி தப்பிக்க உதவியதாக கூறி ராணுவ தளபதியை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Wijegunaratne


இலங்கையில் தனி நாடு கோாிய விடுதலைப் புலிகள் அமைப்பினருடனான உள்நாட்டு போா் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. 2008-2009ம் ஆண்டுகளில் போா் உச்சக்கட்டத்தில் இருந்தது. அப்போது தமிழா்கள் உள்பட பலா் மாயமானாா்கள். இந்நிலையில் போாின் போது தமிழா்கள் உள்பட 11 இளைஞா்கள் மாயமானதாக கொழும்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் மாயமான அனைவரும் தற்போது வரை கண்டுபிடிக்கப் படாததால் அனைவரும் உயிாிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் 11 இளைஞா்கள் மாயமான விவகாரத்தில் முக்கிய குற்றவாளி வெளிநாட்டிற்கு தப்பி செல்ல அந்நாட்டு ராணுவ தளபதி விஜேகுணரத்னே உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் ராணுவ தளபதி விஜேகுணரத்னேவை நவம்பா் 9ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராணுவ தளபதியை ஆஜா்படுத்த தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி