கொரோனா தொற்றுக்கு பின்னர், பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை இலங்கை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவருக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், அவர்கள் இருவரும் இதுவரை பதவி விலகவில்லை.
இலங்கையில் மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்ட நிலையில், இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு வருகிறது.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருந்து பொருட்களுக்கும், மயக்க மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யக்கோரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, இலங்கை மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் ஆகிய பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அவருக்கு எதிராக ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், அவர்கள் இருவரும் இதுவரை பதவி விலகவில்லை.
இலங்கையில் மற்ற அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்து விட்ட நிலையில், இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடுகளிடம் இலங்கை கடன் உதவி கேட்டு வருகிறது.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிர்காக்கும் மருந்து பொருட்களுக்கு அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மருந்து பொருட்களுக்கும், மயக்க மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யக்கோரி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, இலங்கை மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம் ஆகிய பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.