ஆப்நகரம்

பள்ளிகளில் பரிந்துரையை ஏற்றால் கடும் நடவடிக்கை: அரசு அதிரடி உத்தரவு!

பள்ளிகளில் எவ்வித பரிந்துரையையும் ஏற்றுக் கொள்ளாமல் தகுதிகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார்

Samayam Tamil 17 Sep 2020, 7:44 pm
இலங்கை அதிபர், அதிபர் அலுவலக அதிகாரிகள், பிரதமர், பிரதமர் அலுவலக அதிகரிகள் மற்றும் இதர அரசு உயர் பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள் ஆகியோரின் உத்தரவு என குறிப்பிட்டு அழுத்தம் கொடுக்கும் வகையில் பரிந்துரை கடிதங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை தொடர் கதையாக உள்ளது. சில சமயங்களில் அரசு அதிகாரிகளும் கூட இவ்வகையான கடிதங்களை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நடைமுறையை முற்றிலும் ஒழிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, அதிபர், பிரதமர் உள்பட எந்தவொரு அரசு அதிகாரிகளிடம் இருந்தும் அழுத்தம் கொடுக்கும் வகையில் வரும் கடிதங்களை பள்ளி நிர்வாகங்கள் ஏற்றுக் கொள்ள கூடாது என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

மாணவர்களை பள்ளிகளில் சேர்க்கும் போது, அவர்களது தகுதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்க வேண்டும். உரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலே மாணவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள இலங்கை அரசு, எந்தவொரு பரிந்துரை கடிதத்தின் அடிப்படையிலும் மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

16 வயதிலேயே இனி அரசுப் பணிக்கு செல்லலாம்... இலங்கையில் வருகிறது புதிய சட்டம்!!

இதுதொடர்பாக இலங்கை அதிபரின் செயலாளர் பள்ளி நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மேற்கண்ட விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி