ஆப்நகரம்

வங்கி கடன் வட்டியை குறைக்க இலங்கை அரசு முடிவு!

கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் வங்கி கடனை 7 சதவீதம் வரை குறைக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 8 Sep 2020, 1:54 pm
கொரோனா வைரஸ் உலகளவிலான பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்நிலையில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிய பின் வங்கி கடனை 7 சதவீதம் வரை குறைக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Samayam Tamil bank loan


கொழும்புவில் வர்த்தகர்களிடையே உரையாற்றும் போது அமைச்சர் பந்துல இதை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது வங்கி வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலக்க வட்டி தற்போது நீக்கப்பட்டு ஓரிலக்க வட்டி தற்போது உள்ளது. இன்னும் ஓரளவு பொருளாதார வளர்ச்சியடைந்ததும் வங்கி வட்டியை 7 சதவீதமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு கப்பலில் மீண்டும் தீ... இலங்கை கடற்பரப்பில் தொடரும் துயரம்

சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஓரிலக்க வட்டியே அமலில் உள்ளதாகவும் அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார். மேலும் வட்டியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு திருத்தம்: எந்த நாடும் பாடம் எடுக்க முடியாது - இந்தியாவை சாடிய ராஜபக்சே!

அடுத்த செய்தி