ஆப்நகரம்

இலங்கையில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத்தண்டனை அமல்!

இலங்கையில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத்தண்டனை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 11 Jul 2018, 3:48 pm
இலங்கையில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத்தண்டனை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil death-oenalty


இலங்கையில் முதன்முதலாக 1812ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி தூக்குத்தண்டனை வழங்கப்பட்டது. இறுதியாக 1976ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தூக்கிடப்பட்டது. இதனையடுத்து கடந்த 42 ஆண்டுகளாக தூக்குத் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை. நீரில் மூழ்கடித்து மரணிக்கச் செய்தல் உள்ளிட்ட பல மரண தண்டனைகள் அமுலில் உள்ளனர். ஆனால், தூக்குத்தண்டனை மட்டும் 42 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

இந்நிலையில், 42 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத்தண்டனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரன் தெரிவித்துள்ளார். அங்கு போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும விதமாக தூக்குத்தண்டனைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி