ஆப்நகரம்

இலங்கையில் விடுதலைப்புலி ஆயுதங்களை பார்வையிட திடீர் தடை

இலங்கையில் விடுதலைப்புலி ஆயுதங்களை பார்வையிட பொதுமக்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 7 Jul 2018, 6:00 pm
இலங்கையில் விடுதலைப்புலி ஆயுதங்களை பார்வையிட பொதுமக்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ltte war weapons


இலங்கையில் 2009ம் ஆண்டுக்கு முன்பு வரை விடுதலைபுலிகள் சொந்த முயற்சியில் ஏவுகணை, நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் தயாரித்து வைத்திருந்தது. உலகிலேயே அரசுக்கு எதிராக இருக்கும் இயக்கத்தில் இது போன்ற ஆயுதங்களை, விடுதலைப் புலிகள் மட்டுமே கையாண்டாதாக கூறப்படுவதுண்டு.

இலங்கையில் ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான ஆயுதங்களை இலங்கை ராணும் கைப்பற்றியது.பின்னர், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் அங்குள் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தினர். தொடர்ந்து அவற்றை புதுமாத்தளம் பகுதிக்கு மாற்றினர். இலங்கைக்கு வரும் சுற்றலாப் பயணிகளும், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையாளர்களும் தவறாமல் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை பார்வையிட்டு சென்று வந்தனர்.

இந்நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல் உட்பட போர் ஆயுதங்களை பொதுமக்கள் பார்வையிட முடியாது என்று இலங்கை ராணுவம் திடீரென்று தடை விதித்ததுள்ளது. மேலும், ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, யாரும் செல்லாதவாறு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை ராணுவத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கான காரணம் தெரியவில்லை.

அடுத்த செய்தி