கொள்ளை நோயான கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதேசமயம், சரீர விலகல், கைகளை சோப்பு அல்லது சானிடைசர்கள் போட்டு கழுவுவது, முகக்கவசம் அணிவது உள்ளிட்டவைகளே தீர்வாக உள்ளன.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் வெளியில் செல்லும் போதும், உரையாடலின் போதும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில், முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி கைது!
முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பேருந்துகளில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாக அதிபர் கோட்டபய ராஜபக்சே ஏற்கனவே வேதனை தெரிவித்திருந்தார். இலங்கையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட 16 பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுமக்கள் ஒவ்வொருவரும் வெளியில் செல்லும் போதும், உரையாடலின் போதும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் எனவும், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அரசுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இதனை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில், முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இலங்கை ராணுவத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி கைது!
முகக்கவசம் அணியாது செல்பவர்கள் அடையாளம் காணப்பட்டு சுய தனிமைப்படுத்தலுக்கு உடபடுத்தப்படுவார்கள் எனவும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பேருந்துகளில் பயணிப்பவர்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் ராணுவத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்று உள்ளதை பொதுமக்கள் மறந்துள்ளதாக அதிபர் கோட்டபய ராஜபக்சே ஏற்கனவே வேதனை தெரிவித்திருந்தார். இலங்கையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட 16 பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.