ஆப்நகரம்

அந்தப் பொருள் ஒருபோதும் இறக்குமதி செய்யப்படாது... அமைச்சர் உறுதி!

சந்தையில் மஞ்சள் பற்றாக்குறை இருந்தாலும், ஒருபோதும் இந்தப் பொருள் இறக்குமதி செய்யப்படாது என்று இலங்கை அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியாக கூறியுள்ளார்.

Samayam Tamil 18 Sep 2020, 8:44 pm
மஞ்சள் பற்றாக்குறை மற்றும் இறக்குமதி குறித்து, அமைச்சர் பந்துல குணவர்தன, கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, "உள்ளூர் மஞ்சள் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் மஞ்சளை இறக்குமதி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.
Samayam Tamil turmaric


இருப்பினும், மஞ்சள் இறக்குமதியாளர்கள் அதனை இறக்குமதி செய்து சந்தைக்கு விடுவிக்க அனுமதி கோரி வருகின்றனர்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மஞ்சள் பறிமுதல்: இதற்கிடையே, புளூமெண்டால் பகுதியில் சந்தேகத்துக்கிடமான 10 நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 33,000 கிலோகிராம் மஞ்சள், ஏழு லாரிகள் அடங்கிய மூன்று கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டன.

கஞ்சா பயிரிட அனுமதி... இலங்கை அரசிடம் மருத்துவர் சங்கம் கோரிக்கை!

கண்ணாடி இறக்குமதி என்ற போர்வையில் அவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று, நுகர்வுக்கு தகுதியற்ற 100 கிலோ மஞ்சள் ஹட்டனில் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி