ஆப்நகரம்

நாடாளுமன்றம் கலைப்பு? இலங்கை அரசு மறுப்பு!

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளிவந்த செய்திக்கு ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 Nov 2018, 5:37 am
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று வெளிவந்த செய்திக்கு ராஜபக்சே மறுப்பு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil raja paksha


இலங்கையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகள் கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தன. இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிபர் மைத்திரி பால சிறிசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இலங்கையின் பிரதமர் நான் தான் எனவும், அரசியல் சாசனப்படி, ராஜபக்சே பதவியேற்றது செல்லாது என கூறி வந்தார். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை அவசமாக கூட்ட அவர் வலியுறுத்தினார்.

அதிபர் சிறிசேனாவின் இந்த முடிவுக்கு சபாநாயகர் கரு. ஜெயசூரியா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வரும் 14ம் தேதி வாக்கெடுப்பு நடத்தவும் திட்டமிடப்படள்ளது. ஏற்கனவே, 118 எம்பி.,க்கள் கையெழுத்திட்டு ராஜபக்சேவுக்கு எதிராக சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், தற்போது மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் ராஜபக்சேவுக்கு எதிராக திரும்பியுள்ளனர். அக்கட்சியில் 6 எம்பிக்கள் உள்ளனர். அவர்கள் சிறிசேனாவை அவரது வீட்டிலேயே சந்தித்து விட்டு, ராஜபக்சேவுக்கு எதிராகவும், ரணில் விக்ரமசிங்கை ஆதரிக்கப்போவதாக அறிக்கையிட்டுள்ளனர். இதனால், ராஜபக்சே பிரதமராகும் முயற்சியில் தோல்வியடைச் செய்யும் என்று கூறப்படுகிறது. ராஜபக்சே பிரதமராக முடியாது என்பது அதிபர் சிறிசேனாவுக்கே தோல்வியாக கருதப்படும் என்பதால், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று செய்திகள் வந்தன. இந்நிலையில், அவ்வாறு வந்த செய்திகள் வதந்திகள் என்றும், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி