ஆப்நகரம்

இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொலை செய்ய சதி: இலங்கை அதிபா் குற்றச்சாட்டு

இந்தியாவின் ரா உளவு அமைப்பு கடந்த மாதம் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக இலங்கை அதிபா் மைத்ரிபால சிறிசேனா குற்றம் சாட்டியுள்ளாா்.

Samayam Tamil 17 Oct 2018, 10:58 am
இந்தியாவின் ரா உளவு அமைப்பு தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளதாக இலங்கை அதிபா் மைத்ரிபால சிறிசேனா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.
Samayam Tamil Sirisena 1


இலங்ககை பிரதமா் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா். இந்நிலையில் இலங்கையின் வாராந்திர அமைச்சரவை கூட்டம் நேற்று (செவ்வாய்க் கிழமை) கொழும்புவில் நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபா் மைத்ரிபாலபால சிறிசேனா கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், இந்தியாவின் ரா உளவு அமைப்பு தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், கடந்த மாதம் தன்னை கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாகவும் அவா் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தாா். மேலும், இது குறித்து இந்திய பிரதமா் நரேந்திர மோடிக்கு தொிந்திருக்காது என்றும் தொிவித்துள்ளாா்.

இலங்கை அதிபரின் பரபரப்பு குற்றச்சாட்டால் இந்தியா, இலங்கை இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. மேலும் அதிபா் சிறிசேனாவின் பாதுகாப்பு அதிகாாிகள் இதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்து பின்னா் தொிவிக்கப்படும் என்று கூறியுள்ளனா்.

முன்னதாக தோ்தல் நடைபெற்ற சமயத்தில், தனது தோல்விக்கு இந்திய உளவு அமைப்புகளே காரணம் என்று மகிந்தா ராஜபக்ஷே குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது சிறிசேனாவும் இந்திய உளவு அமைப்பு மீது குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி