ஆப்நகரம்

அரசியல் பழிவாங்கல் பண்ணமாட்டேன்: ராஜபக்சே

அரசியல் பழிவாங்கலில் ஈடுபடமாட்டேன் என இலங்கை பிரதமர் ராஜபக்சே கூறியுள்ளார்.

Samayam Tamil 25 Aug 2020, 6:15 pm
புதிய அரசியலமைப்பு ஒன்றை நிறுவ, கட்சி பேதங்களைக் கடந்து அனைவரது ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Rajapaksa


இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உறுப்பினர்களுக்கான விசேஷ செயல் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ராஜபக்சே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“உறுப்பினர்கள் அனைவரும் சிறந்த மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும். இதனை புறக்கணிப்பவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. அரசியல் பழிவாங்கலில் ஈடுபட எமக்கு நேரம் இல்லை. இதற்காக மக்கள் எங்களுக்கு இந்த வாய்ப்பில்லை” என்று ராஜபக்சே பேசினார்.

கொரோனாவை விட அதிக உயிர்பலி: இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சல்!

“நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை நிறுவவே மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். எனவே இதை நாம் முதலில் நிறைவேற்றவேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு தரப்புக்கு மட்டும் உரித்தானது அல்ல. உண்மையில் இதன் ஒவ்வொரு ஷரத்தும் எமது வாழ்க்கையை தீர்மானிக்கும்” என தனது பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

விடுதலை புலிகளுக்கு ஆதரவளித்திருந்தால் நல்லா இருந்திருப்பாங்க: இலங்கை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி தகவல்!

அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் கட்சி பேதங்களைக் கடந்து தேவைப்படுவது எமது அரசியல் பொறுப்பாக உள்ளது. இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்”

அடுத்த செய்தி