ஆப்நகரம்

புலம்பெயர்ந்த சிங்களர்களுக்கு பிரதமர் ராஜபக்சே பகிரங்க அழைப்பு!!

புலம்பெயர்ந்து வாழும் சிங்களர்கள் இலங்கையில் இனி அச்சமின்றி முதலீடு செய்யலாம் என்று இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 10 Sep 2020, 7:31 pm
இலங்கையில் அந்திய முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக, புலம்பெயர்ந்துள்ள முதலீட்டாளர்களுடன், இலங்கை பிரதமர் ராஜபக்சே இன்று ஆவோசனை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியது:
Samayam Tamil srilanka pm


கடந்த ஆட்சிக் காலத்தில், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முயற்சித்த புலம்பெயர் சிங்களவர்கள் அனுபவித்த சிரமங்களை எனது தலைமையிலான அரசு நன்கு அறியும்.

முக்கியமாக, இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள உள்ளூர் முகவர்கள் கமிஷன் பெற முற்பட்டதால் முதலீட்டாளர்கள் இலங்கையை தவிர்த்து வெளியேறியது மிகவும் வேதனை அளிக்கிறது.

இலங்கையில் பழங்கால குகை கண்டுபிடிப்பு!

தற்போதைய அரசு முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். அத்துடன் முதலீட்டாளர்களிடம் யாராவது கமிஷன் எதிர்பார்ப்பது அல்லது வேறு ஏதாவது தொல்லைகள் கொடுத்தால் அதுதொடர்பாக அவர்கள் அதிபர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

எனவே, இலங்கை தீவை உலகம் திரும்பிப் பார்க்கும் நாடாக்குவதற்கு புலன்பெயர் முதலீட்டாளர்கள் இலங்கை அரசுடன் கைகோர்த்து பணியாற்ற வேண்டும் என்று ராஜபக்சே பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி