ஆப்நகரம்

ஆஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழர் பலி!

ஆஸ்திரேலியாவில் ஆற்றில் மூழ்கி தமிழ் இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 13 Sep 2020, 1:35 pm
ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியாவின் மில்துரா பகுதியில் முர்ரே ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பலியானவர் 21 வயதான தமிழ் இளைஞர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tamil youth died


நேற்று முன் தினம் தனது நண்பர்களுடன் முர்ரே ஆற்றுக்குச் சென்ற அந்த இளைஞர் நீந்தி குளித்தபோது அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணி வெள்ளிக் கிழமை பிற்பகல் முதல் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இளைஞரின் உடல் மீட்கப்பட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

கள்ளத்தோணியில் சமையல் மஞ்சள் கடத்தல்... முன்று பேர் கைது!!

மெல்போர்னில் கல்வி கற்றுவரும் இலங்கையைச் சேர்ந்த 21 வயது இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இலங்கை: கொரோனா மையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்!

தொழில் நிமித்தம் தனது நண்பர்களோடு அவர் மில்துராவுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி