ஆப்நகரம்

நான் தான் இன்னமும் பிரதமர்: ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!!

பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Oct 2018, 10:50 pm
இலங்கைக்குக்கு இன்னமும் நான் தான் பிரதமர் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
Samayam Tamil நான் தான் இன்னமும் பிரதமர்: ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!!
நான் தான் இன்னமும் பிரதமர்: ரணில் விக்கிரமசிங்கே அதிரடி!!


இலங்கையில் ஆட்சியில் இருந்த கட்சியின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, இலங்கை அதிபர் சிறிசேனா பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து நீக்கி விட்டு, மஹிந்த ராஜபக்சேவை இலங்கையின் புதிய பிரதமராக பதவி அமர்த்தினார். திடீரென நடந்த இந்த நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனைத் தொடர்ந்து, இலங்கைக்கு நான் தான் இன்னமும் பிரதமர் எனவும், தொடர்ந்து நானே பிரதமராக நீடிப்பேன் எனவும் ரணில் விக்கரமசிங்கே தெரிவித்துள்ளளார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரதமர் பதவியிலிருந்து என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, புதிதாக பதவியேற்ற ராஜபக்சேவுக்கு, பாஜகவின் சுப்பிரமணிய சுவாமி ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி