ஆப்நகரம்

இலங்கை நாடாளுமன்றம் 7ம் தேதி கூடுகிறது- கரு. ஜெயசூரியா

இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படுவது குறித்து, சபாநாயகர் ஜெயசூரியா புதிய அறிவிப்பு

Samayam Tamil 3 Nov 2018, 9:39 am
வரும் 7ம் தேதி, இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு. ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil karu-jayasurya
வரும் 7ம் தேதி கூடும் இலங்கை நாடாளுமன்றம்


இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் சபாநாயகருக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்து வந்தன.

இதனை அடுத்து சபாநாயகர் கரு ஜெயசூரிய ஜனாதிபதியை சந்தித்து தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.இந்த சந்திப்பு தொடர்பாக விளக்கமளிக்கும் நோக்கில் நாடாளுமன்றத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

இதில் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதியினர்,எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் மற்றும் சில தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியினர் கலந்துகொண்டிருந்தனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற சபாநாயகர் கரு.ஜெயசூரிய, வரும் 7-ஆம்தேதி இலங்கை நாடாளுமன்றம் கூட்டப்படுவதாகத் தெரிவித்தார்.

அடுத்த செய்தி