ஆப்நகரம்

இலங்கை அதிபரின் பணியாளர் மர்மமான முறையில் மரணம்!

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Aug 2018, 9:36 pm
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பணியாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Maithripala Sirisena


இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பணியாளர் ஒருவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர் வெளிய வராததால், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் கதவை தட்டினர். அப்போதும் கதவு திறக்கப்படாததால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், போலீசாருக்கு தகவல்

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், பணியாளர் தங்கியிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மைத்திரிபால பணியாளர் சடலமாக கிடந்தார். இதையடுத்து சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அதிபரின் பணியாளர் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலையா அல்லத வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி