ஆப்நகரம்

இலங்கையில் வன்முறையற்ற சதித்திட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது- கரு. ஜெயசூரியா

இலங்கையில் திட்டமிடப்பட்ட அரசியல் நிலைமை மாற்றப்பட்டுள்ளதாக கரு. ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 7 Nov 2018, 3:50 pm
இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூரியா, இலங்கையில் வன்முறையற்ற சதித்திட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Samayam Tamil Tamil-image
இலங்கையில் துப்பாக்கிகள் இல்லாமல் சதி- கரு, ஜெயசூரியா


இலங்கையில் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகள் கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தன. இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிபர் மைத்திரி பால சிறிசேனா பதவிப்பிரமாண செய்து வைத்தார்.

ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இலங்கையின் பிரதமர் நான் தான் எனவும், அரசியல் சாசனப்படி, ராஜபக்சே பதவியேற்றது செல்லாது என கூறி வந்தார். இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க நாடாளுமன்றத்தை அவசமாக கூட்ட அவர் வலியுறுத்தினார்.

அதிபர் சிறிசேனாவின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சபாநாயகர் கரு. ஜெயசூரியா, வெளிநாட்டு தூதுரக அதிகாரிகளுக்கு அவர் கடந்த 5ம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

இலங்கை அரசியலின் தற்போதைய நிலை முன்பே திட்டமிடப்பட்டது எனவும், வன்முறையற்ற சதித்திட்டம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது என அந்த கடித்தத்தில் கரு. ஜெயசூரியா குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகத்துக்கு எதிரான வகையில் அதிபர் சிறிசேனா செயல்பட்டு வருவதாகவும், அரசியலமைப்புக்கு முரணாக அவர் நடந்து கொண்டு வருவதாகவும் சபாநாயகர் கரு. ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் வரும் 14-ஆம் தேதி கூடும் என்று சிறிசேனா அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷா நாணயக்கார நேற்று ராஜினாமா செய்துள்ளார். இது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி