ஆப்நகரம்

குண்டுவெடிப்பு பாதிப்பில் இருந்து மெள்ள மீளும் இலங்கை

இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதமாகும் நிலையில் அந்நாட்டில் கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் அங்கு கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தக பைகள் சோதனை செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Samayam Tamil 21 May 2019, 6:50 pm
இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதமாகும் நிலையில் அந்நாட்டில் கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil 155843504762280


இலங்கை வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 26 பேர் குற்றப்புலனாய்வுத் துறையாலும், 3 பேர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினாலும், 9 பேர் போலீசாராலும் கைது செய்யப்பட்டவர்கள்.

இவர்களில் போலீசாரால் கைது செய்யப்பட்ட 9 பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மே 6 வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 9 பேரும் வெல்லம்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரே தொழிற்சாலையில் வேலை செய்துவந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தின் போது தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதனையடுத்து அந்த நாட்டில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் அந்த நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட்ட போது பாதுகாப்பு காரணமாக கத்தோலிக்க பள்ளிகளின் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் அங்கு கத்தோலிக்க பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தக பைகள் சோதனை செய்யப்பட்ட பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி