கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதுடன், அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் ஆத்திரமடைந்துள்ள பொதுமக்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாட்டு மக்களுக்காக இன்று உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது: முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கு தமது தலைமையிலான அரசு அரசு 24 மணி நேரமும் உழைத்து வருகிறது.
எனவே மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு, பொறுமையை கைகொள்ள வேண்டும். தெருக்களில் மக்கள் நடத்தும் போராட்டங்களால் ஒவ்வொரு நொடியு் இலங்கை விலைமதிப்பற்ற வரவை இழந்து வருகிறது.
நாட்டின் பொருளாதார நிலை... மனம்நொந்த பிரபல கிரிக்கெட் வீரர்!
எனது குடும்பம் மீது பரப்பப்படு் அவதூறை நான் பொறுத்துக் கொள்கிறேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புமாறு போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். பாராளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது என்று ராஜபக்சே பேசினார்.
முன்னதாக, 'மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை' என்று இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.
எனவே மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிட்டு, பொறுமையை கைகொள்ள வேண்டும். தெருக்களில் மக்கள் நடத்தும் போராட்டங்களால் ஒவ்வொரு நொடியு் இலங்கை விலைமதிப்பற்ற வரவை இழந்து வருகிறது.
நாட்டின் பொருளாதார நிலை... மனம்நொந்த பிரபல கிரிக்கெட் வீரர்!
எனது குடும்பம் மீது பரப்பப்படு் அவதூறை நான் பொறுத்துக் கொள்கிறேன். 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் வீட்டுக்கு அனுப்புமாறு போராட்டக்காரர்கள் கோரி வருகின்றனர். பாராளுமன்றத்தை நிராகரிப்பது ஆபத்தானது என்று ராஜபக்சே பேசினார்.
முன்னதாக, 'மக்களின் தேவைகளை நிறைவேற்ற அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை' என்று இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார்.