ஆப்நகரம்

இலங்கையில் தடையை மீறி திருமணம்: போலீஸ் நடவடிக்கை!

இலங்கையில் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

Samayam Tamil 31 Oct 2020, 2:38 pm
இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகின்றன. பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil corona lockdown


ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறையினர் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருமண நிகழ்வு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி போலீஸ் மா அதிபர் அஜித் ரோஹன தௌிவுபடுத்தினார்.

கொரோனா பரிசோதனை என கூறி தூக்க மாத்திரைகளை கொடுத்து கொள்ளை!

கொள்ளுப்பிட்டி போலீஸ் பிரிவிற்கு உட்பட்ட காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று காலை திருமண நிகழ்வொன்று இடம்பெறுவதாக கிடைத்த தகவலுக்கமைய, கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் விசேஷ விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

விசாரணையின் போது 35 பேர் திருமண நிகழ்வில் கலந்துகொண்டது தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், அந்த ஹோட்டலின் முகாமையாளர், திருமண நிகழ்வை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மேல் மாகாணத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் ஒன்று கூடும் வகையில் திருமண நிகழ்வுகள், விழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள் நடத்தப்படக் கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி