ஆப்நகரம்

இலங்கை திரிகோணமலையில் நிலநடுக்கம்: சுனாமி பீதியில் பொதுமக்கள்

இலங்கை திரிகோணமலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 12.35 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

Samayam Tamil 16 Sep 2018, 2:55 am
இலங்கை திரிகோணமலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 12.35 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
Samayam Tamil 7dab1900cdae30a0
இலங்கை திரிகோணமலையில் திடீர் நிலநடுக்கம்


இலங்கையின் கிழக்குப் பகுதியில் உள்ள மாவட்டம் திரிகோணமலை. இங்குள்ள இயற்கைத் துறைமுகம் காரணமாக இந்த நகரம் இலங்கைக்கு வெளியிலும் அறியப்பட்ட ஒன்றாகவுள்ளது.

நேற்று இரவு 12.35 மணியளவில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீதிகள் மற்றும் தரைப் பகுதியில் தஞ்சம் புகுந்தனர்.

திரிகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், தோப்பூர், குச்சவெளி, தம்பல காமல் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்டது. மேலும் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.

இந்நிலையில் இந்த நிலநடுக்கம் 2 முதல் 3 ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியுள்ளது. முன்னதாக கடல் அலைகள் அதிகமானதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னர் திரும்பிப் பெறப்பட்டது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது பொது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி