ஆப்நகரம்

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்: ராஜபக்சே கட்சிக்கு தாவிய தமிழ் எம்பி!

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ராஜபக்சே அணிக்கு மாறியுள்ளார்.

Samayam Tamil 2 Nov 2018, 7:50 pm
இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ராஜபக்சே அணிக்கு மாறியுள்ளார்.
Samayam Tamil mp


இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து அதிபர் சிறிசேன அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை புதிய பிரதமராக அறிவித்து, பதவியேற்கச் செய்தார். அதிபர் சிறிசேனவின் அறிவிப்பை ஏற்காத ரணில், பிரதமராக தான் நீடிப்பதாக அதிபருக்கு கடிதம் எழுதினார். ராஜபக்சேவை பிரதமர் பதவியில் நியமிக்க அதிபர் சிறிசேனாவுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் ரணில் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில், நாடாளுமன்றத்தை வரும் 16ஆம் தேதி வரை முடக்கி வைப்பதாக அதிபர் சிறிசேனா அதிரடியாக அறிவித்தார். இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக ரணில் தெரிவித்தார். கொழும்புவில் தனது ஆதரவுக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இப்படி, பல திருப்பங்களும், மாற்றங்களும் நிகழ்ந்து வரும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.வியாழேந்திரன் ராஜபக்சே கட்சிக்கு மாறியுள்ளார். இதையடுத்து அவருக்கு இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட்து. அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், இணை அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி