ஆப்நகரம்

வறுமையை ஒழிக்க இலங்கை அரசு புதிய திட்டம்!

வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்கும் திட்டம் இலங்கையில் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்குகிறது.

Samayam Tamil 1 Sep 2020, 8:09 pm
இலங்கையில் வறுமையை ஒழிக்க அரசு புதிய திட்டத்தை தொடங்கவுள்ளது.
Samayam Tamil sri lanka president


வறுமையை ஒழிக்க குறைந்த வருமானம் உடையவர்களுக்கு தொழில் வழங்கும் திட்டம் நாளை (செப்டம்பர் 2ஆம் தேதி) தொடங்கப்படவுள்ளது.

அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பல்துறை அபிவிருத்தி செயலணி மூலம் குறைந்த வருமானமுடைய மற்றும் தேர்ச்சி பெறாதவர்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதே இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும்

கொரோனா: இலங்கையில் மீண்டும் ஊரடங்கு?

தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில்வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே அலுவலகத்தின் ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ளது.

“6 மாதகால தொடர் பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 22,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். சிறப்பான பயிற்சியை முடித்த பின்னர் தாம் பயிற்சி பெற்ற துறையில் தமது நிலையான வதிவிட பிரதேசத்தில் அரசு அனுமதி பெற்ற ஆரம்ப கைவினைஞர் அல்லாத சம்பளம் (35,000) மற்றும் கொடுப்பனவுகளைக் கொண்ட அரசின் நிலையான பணிக்கு நியமிக்கப்படுவதற்கு பயிற்சி பெற்றவர்களுக்கு சந்தர்ப்பம் உண்டு” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபருக்கு அமெரிக்காவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு!!

18 வயது முதல் 40 வயதுள்ளோர் இதற்காக தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அவர்களுக்காக பயிற்சியும் அளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி