ஆப்நகரம்

சீச்சீ... வகுப்பறையில் மாணவிகள் செய்யும் காரியமா இது?!

பள்ளி வகுப்பறையில் மது அருந்திக் கொண்டிருந்த மாணவிகள் மூன்று பேரை போலீஸார் பாட்டிலும் கையுமாக கைது செய்தனர்.

Samayam Tamil 14 Sep 2020, 7:53 pm
இலங்கை, அனுராதபுரம் மதவாச்சி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் ப்ளஸ் 1 படித்துவரும் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
Samayam Tamil beer


இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், வாட்டர் பேக்கில் பியர் மதுபானத்தை எடுத்து வந்து அருந்திக்கொண்டிருந்த மாணவிகள் மூன்று பேரையும் கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

காரில் வந்த ஒரு நபர் மாணவிகளுக்கு மதுபானத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளதாகவும், அந்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கள்ளத்தோணியில் சமையல் மஞ்சள் கடத்தல்... முன்று பேர் கைது!!

கைதாகி விடுவிக்கப்பட்ட மாணவிகள் நீண்டகாலமாக மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி