ஆப்நகரம்

பல கோடி மதிப்பிலான தங்கம்... இந்தியாவுக்கு கடத்த முயன்ற இருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இரண்டு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Samayam Tamil 29 Aug 2020, 5:07 pm
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil gold


இதனையடுத்து, அவர்கள் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது அனலைதீவு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக படகில் பயணித்துக் கொண்டிருந்த இருவரிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குபின் முரணாக தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்களின் உடைமைகள் சோதனையிடப்பட்டன. சோதனையில் 5.5 கிலோ தங்கம் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது, இதன் மதிப்பு 6.2 கோடி ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலங்கை மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!

மதகலைப் பகுதியைச் சேர்ந்த இருவரும் கமிஷன் தொகைக்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி