ஆப்நகரம்

விடுதலைப் புலிகள் மீண்டு வர வேண்டும்: இலங்கை அமைச்சர்

யாழ்பாணம்: விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறியுள்ளார்.

Samayam Tamil 3 Jul 2018, 1:37 pm
யாழ்பாணம்: விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்று இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் கூறியுள்ளார்.
Samayam Tamil vijayakala


இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றல் பேசிய இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், "வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழவேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும். தமிழீழ விடுதலை புலிகளை வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும்" என்று கூறியுள்ளார்.

"தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலையால் நடந்தே ஜனாதிபதியை நாங்கள் தேர்வு செய்தோம். ஆனால் ஜனாதிபதி எங்களுக்கு என்ன செய்தார்? தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும்." என்றும் விஜயகலா பேசியுள்ளார்.

அடுத்த செய்தி