ஆப்நகரம்

யார் யாருக்கு கொரோனா தடுப்பூசி? அரசு நடத்தும் ஆலோசனை!

கொரோனா தடுப்பூசியை யார் யாருக்கு கொடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

Samayam Tamil 27 Dec 2020, 1:47 pm
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை கொண்டு வருவது தொடர்பாக வரும் திங்கள் கிழமை (டிசம்பர் 28) நீண்ட பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்ப்பதாக அதற்கான இணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.
Samayam Tamil corona vaccine


தடுப்பூசி வழங்கப்பட வேண்டிய பிரிவினரின் தேவை மற்றும் முன்னுரிமை அடிப்படையில் இது தீர்மானிக்கப்பட உள்ளது.

சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரிவு, மக்கள் நெருக்கம் மிகுந்த கொழும்பு மக்களுக்கு முதலாவதாக இந்தத் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
எந்த ஊருக்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? வானிலை ஆய்வு மையம் தகவல்!
இதனிடையே, கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சந்திர ஜயசுமன குறிப்பிட்டார்.
இலங்கைக்கு டூர் போறீங்களா? இதை மறந்துடாதீங்க!
25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. 84 மில்லியன் அமெரிக்க டாலரை கொண்ட முதலாவது தவணையை வழங்குவதற்காக, நிதி அமைச்சகம் மற்றும் அபிவிருத்தி வங்கிக்கு இடையில் ஆவணங்கள் பரிமாறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகத்தின் செயலாளர் உறுதிப்படுத்தினார்.

அடுத்த செய்தி