ஆப்நகரம்

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் எண்ணமில்லை: மத்திய அரசு

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் எண்ணமில்லை என்று மத்திய அரசு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

TNN 11 Apr 2017, 3:27 pm
விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் எண்ணமில்லை என்று மத்திய அரசு வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil
பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் எண்ணமில்லை: மத்திய அரசு


வங்கிகளில் விவசாயக்கடன் தள்ளுபடி, போதிய வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாயிகள், தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். தொடர்ந்து ஒரு மாதமாக இப்போராட்டம் நீடித்து வருகிறது. இன்றைய போராட்டத்தில் விவசாயிகள் மண் சோறு உண்ணும் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறனர்.

இன்று வரை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலேயே இருந்தும் கூட போராட்டம் நடத்தும் விவசாயிகளைச் சந்தித்து பேசவில்லை. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசுக்கு விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் எண்ணமில்லை என்று அரசு வட்டாத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி