ஆப்நகரம்

வைரமுத்து மீது அடுத்தடுத்து காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு

ஆண்டாள் குறித்து சர்ச்சை பேச்சு கருத்துக்களை பேசியதாக கவிஞர் வைரமுத்துவின் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், சட்டரீதியான சிக்கல் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Jan 2018, 6:04 pm
ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசியதாக கவிஞர் வைரமுத்துவின் மீது சென்னை ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், சிந்தாரிப்பேட்டை, கொளத்தூர் காவல் நிலையங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil  complaint filed on vairamuthu
வைரமுத்து மீது அடுத்தடுத்து காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு


கடந்த 7ம் தேதி, ஆழ்வார் திருமகள் ஆண்டாள் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கவிஞர் வைரமுத்து கலந்த கொண்டார். அப்போது பேசிய அவர், வரலாற்று ஆய்வுகளை மேற்கோளாக குறிப்பிட்டு, சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், வைரமுத்து மற்றும் தினமணி நாளிதழ் ஆசிரியருக்கு எதிராக சென்னை ராஜபாளையத்தில் 3 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, எதிராக சமுதாய நல்லிணக்கப் பேரவையைச் சேர்ந்த முருகானந்தம், என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதே போல், இந்து முன்னணி நிர்வாக முருகேசன் என்பவர் சென்னை சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதால்.

அடுத்தடுத்து வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதால், வைரமுத்துவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி