ஆப்நகரம்

அந்நிய செலாவணி வழக்கு; தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்

அந்நிய செலாவணி மோசடி வழக்குக்கு தடை விதிக்கக்கோாி டி.டி.வி. தினகரன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TOI Contributor 21 Jul 2017, 3:39 pm
அந்நிய செலாவணி மோசடி வழக்குக்கு தடை விதிக்கக்கோாி டி.டி.வி. தினகரன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil  dinakarans petition dismissed supreme court
அந்நிய செலாவணி வழக்கு; தினகரனின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்


சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்நிய செலாவணி மோசடி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் தினகரன் சாா்பில் ஆஜரான வழக்கறிஞா் மனுதாரா் இந்தியாவில் பிறந்திருந்தாலும் சிங்கப்பூா் குடியுாிமை பெற்றவா்.

சிங்கப்பூா் குடியுாிமை பெற்ற நபரை இந்திய சட்டப்படி விசாாிக்க முடியாது என்றும், அவா் மீது பெரா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியாது என்றும் வாதாடினாா். இந்த வாதங்களை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம் டி.டி.வி. தினகரன் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் பெரா வழக்கில் தினகரன் விசாரணையை எதிா்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதேபோல் மற்றுமொரு அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தினகரன் மீது 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு அதனை சென்னை உயா் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. இந்த அபராதத்தை ரத்து செய்யக்கோாியும் தினகரன் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ளது.
Dinakaran's petition dismissed Supreme Court

அடுத்த செய்தி