ஆப்நகரம்

முதல்வருக்கு சிகிச்சை: ரகசியத்தை உடைத்த எய்ம்ஸ் டாக்டர்

எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருவது பல யூகங்களையும் எழுப்பியுள்ளது.

TOI Contributor 7 Oct 2016, 5:45 pm
எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருவது பல யூகங்களையும் எழுப்பியுள்ளது.
Samayam Tamil  infection in tamil nadu cm jayalalithas blood not contained aiims doctor requesting anonymity
முதல்வருக்கு சிகிச்சை: ரகசியத்தை உடைத்த எய்ம்ஸ் டாக்டர்


எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.கிலானி, மயக்க மருத்துவ நிபுணர் டாக்டர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட மருத்துவ நிபுணர் குழு அப்போலோ மருத்துவ நிபுணர் குழுவினருடன் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர் என்ற செய்தியை நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டது.

இந்நிலையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவம் குறித்து பெயர் வெளியிட விரும்பாத எய்ம்ஸ் டாக்டர் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், ''முதல்வருக்கு ரத்தத்தில் கிருமிகள் இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரது உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது'' என்றும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து கடந்த 16 நாட்களாக ஐசியு-வில் வைத்து முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக ரத்தத்தில் கிருமி இருந்தால், முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று துவங்கி பின்னரே நோயின் வீரியத்தை வெளியே காட்டும் என்று அந்த எய்ம்ஸ் டாக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசே நேரடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை தொடர்பு கொண்டு, இரண்டாவது கருத்துக்காக டாக்டர்களை அனுப்புமாறு கேட்டதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

மேலும் முதல்வருக்கு அளித்து வரும் சிகிச்சை சரியானது தானா? இல்லையா? என்பதை அறியவே எய்ம்ஸ் டாக்டர்கள் வந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. விரைவில் முதல்வர் குணமடைய வேண்டும். இதுதான் அனைவரின் எண்ணமும்.

Infection in Tamil Nadu CM Jayalalitha's blood not contained: AIIMS doctor requesting anonymity
Tamil Nadu CM Jayalalitha health, Tamil Nadu CM Jayalalithaa, Sasikala Natarajan

அடுத்த செய்தி