ஆப்நகரம்

ஓ.பி.எஸ் அணிக்கு பின்னடைவா?

சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பல நாட்களாகிய பின்னரும் போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாமல் ஓ.பி.எஸ் அணி திணறி வருவதாக கூறப்படுகிறது.

TNN 16 Feb 2017, 8:59 am
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி பல நாட்களாகிய பின்னரும் போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாமல் ஓ.பி.எஸ் அணி திணறி வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil  ops team is in recession
ஓ.பி.எஸ் அணிக்கு பின்னடைவா?


சசிகலா மற்றும் ஓ.பி.எஸ்க்கு இடையிலான அதிகாரப்போட்டியில்,சசிகலாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது மிகப்பெரிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.ஆனால் தனக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டமன்றக் குழு தலைவராக தேர்ந்தெடுத்த சசிகலா,தான் சிறையில் இருந்தாலும் தன்னுடைய பேச்சைக் கேட்டு ஆட்சி நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ஓ.பி.எஸ் அணியை பொறுத்தவரை,ஆரம்பத்தில் வரிசையாக எம்.பிக்கள் வந்து ஆதரவு அளித்தாலும்,தற்போதைய சூழலுக்கு தேவையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு மிகக் குறைவாகவே உள்ளது.கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக தனி அணியை நடத்தி வரும் ஓ.பி.எஸ்க்கு முன்னாள் அதிமுக நிர்வாகிகள் மட்டுமே ஆதரவளித்து வருவது,ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

ஒருவேளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தார்,ஓ.பி.எஸ்சும் அவரது அணியினரும் அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு வெறும் எம்.எல்.ஏக்களாக மட்டுமே தொடர முடியும்.எனவே எப்படியாவது எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்துவிட வேண்டும் என ஓ.பி.எஸ் பிரம்ம பிரயத்தனம் செய்து வருகிறார்.

சொகுசு ரெசார்ட்டில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன்,அதிக அளவில் எம்.எல்.ஏக்கள் தனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என ஓ.பி.எஸ் நம்பிக்கையுடன் உள்ளார்.எனவே ரகசிய வாக்கெடுப்புக்கும் அவர் தயார் என கூறப்படுகிறது.

OPS team is in Recession?

அடுத்த செய்தி