சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலாவுக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில்,அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், அதனைத் தொடர்ந்து வழிநடத்திய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்குப் பின்னர் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.விகே சசிகலா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.விகே சசிகலா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள். — Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 29, 2016 சென்னை வானகரத்தில் இன்று காலை நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக விகே சசிகலா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற 5 பேர், சசிகலாவை நேரில் சந்தித்து, அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தியதன் அடிப்படையில், அதிமுக பொதுச்செயலாளராக விகே.சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அதிமுக கழக அலுவலகத்திற்கு வந்து முறைப்படி கட்சிப் பணிகளை ஏற்பார் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Minister Pon. RadhaKrishnan conveyed his wishes to VK Saiskala, newly elected AIADMK General Secretary. 14 Resolution accepted in AIADMK General Body Meeting.
இது குறித்து பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில்,அதிமுகவை உருவாக்கிய எம்ஜிஆர், அதனைத் தொடர்ந்து வழிநடத்திய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்குப் பின்னர் இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.விகே சசிகலா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.
பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி.விகே சசிகலா அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்கள். — Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 29, 2016 சென்னை வானகரத்தில் இன்று காலை நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளராக விகே சசிகலா ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சென்ற 5 பேர், சசிகலாவை நேரில் சந்தித்து, அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு வலியுறுத்தியதன் அடிப்படையில், அதிமுக பொதுச்செயலாளராக விகே.சசிகலா நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அதிமுக கழக அலுவலகத்திற்கு வந்து முறைப்படி கட்சிப் பணிகளை ஏற்பார் என்று அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Minister Pon. RadhaKrishnan conveyed his wishes to VK Saiskala, newly elected AIADMK General Secretary. 14 Resolution accepted in AIADMK General Body Meeting.