ஆப்நகரம்

ஜெயலலிதாவைப் போல வந்தாலும், இரட்டை விரலை காட்டாதது ஏமாற்றமே!!

ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்திற்கு வந்த சசிகலா முதலில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவினார்.

TOI Contributor 31 Dec 2016, 12:38 pm
ராயப்பேட்டையில் அதிமுக தலைமையகத்திற்கு வந்த சசிகலா முதலில் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, அங்கு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர் தூவினார்.
Samayam Tamil  such things are missing today when sasikala came to the party office
ஜெயலலிதாவைப் போல வந்தாலும், இரட்டை விரலை காட்டாதது ஏமாற்றமே!!


அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து வணக்கம் தெரிவித்து, பொதுச்செயலாளர் அறையில் இருக்கையில் அமர்ந்தார். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

ஜெயலலிதா போன்றே பச்சை நிறத்தில் சேலை அணிந்து, அவரைப் போன்றே சிகை அலங்காரமும் செய்து வந்தார். ஆனால், ஜெயலலிதா தலைமைக் கழகத்திற்கு வந்தால், அம்மா என்ற கோஷம் வானைப் பிளக்கும். அவர் கார் விட்டு இறங்கிய பின்னர் தொண்டர்களைப் பார்த்து, இரட்டை விரலைக் காட்டுவார். அதுதான் கட்சியின் டிரேட் மார்க். அதுவெல்லாம் இன்று மிஸ்ஸிங் என்றுதான் கூற வேண்டும். பெரியா ஆரவாரமும் இல்லை. அந்த இடத்தில் ஒரு மன அழுத்தம்தான் தொண்டர்களிடையே காணப்பட்டது.

அடுத்த செய்தி