ஆப்நகரம்

தமிழகத்தில் சாலை விதிமீறல்- இரண்டே நாட்களில் இத்தனை லட்சம் வழக்குப்பதிவா!

தமிழகம் முழுவதும் கடந்த 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், சாலை விதிகளை மீறியதாக 1.50 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Samayam Tamil 17 Sep 2019, 11:25 am
தமிழகம் முழுவதும் கடந்த 14 மற்றும் 15 தேதிகளில் மட்டும் சாலை விதிகளை மீறியதாக 1.50 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil தமிழகத்தில் இரு நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 1.50 லட்சம் வழக்குப்பதிவு!
தமிழகத்தில் இரு நாட்களில் சாலை விதிகளை மீறியதாக 1.50 லட்சம் வழக்குப்பதிவு!


சாலைகளில் வாகனங்களை ஓட்டிச் செல்வோர், போக்குவரத்து காவலர்கள் இல்லாவிட்டால் சாலை விதிகளை மீறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதனைத் தடுக்கும் நடவடிக்கைகளில் தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அந்தவகையில், சாலை விதிமீறலை தடுப்பதற்காக சென்னை அண்ணா நகரில் கடந்த ஜூலை மாத இறுதியில் 5 முக்கிய சந்திப்புகளில் A.N.P.R. எனப்படும் 58 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் 24 மணிநேரமும் தானியங்கி முறையில் இயங்கி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை படம்பிடித்து வருகின்றன.

இதனிடையே, போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது.

பிஎஸ் 6 மாசு உமிழ்வு விதிகள் எதிரொலி: தீவிர ஆலோசனையில் மாருதி சுஸுகி

இந்த சோதனையில், சாலை விதிகளை மீறியதாக 1.50 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதில், டூவிலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 1.18 லட்சம் வழக்குகளும், காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்று 36,835 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 28 வழக்குகளும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கொண்டு சென்றதாக 542 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டதாக டி.ஜி.பி. அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி திணிப்பு: மத்திய அரசைக் கண்டித்து செப் 20 அன்று மாநில அளவில் திமுக ஆர்ப்பாட்டம்..!

புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன. குறைந்தபட்ச அபராத தொகை ரூ.100 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புகழேந்திக்கு டாடா வைத்த தினகரன்; விரைவில் பாஜகவில் பார்க்கலாம்!!

அடுத்த செய்தி