ஆப்நகரம்

ஈரோட்டில் பேருந்து விபத்தில் சிக்கி ஒருவா் பலி, 70 போ் காயம்

ஈரோடு மாவட்டம் கடம்பூா் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா், 70 போ் காயமடைந்துள்ளனா்.

Samayam Tamil 18 Sep 2018, 11:20 am

ஈரோடு மாவட்டம் கடம்பூா் அருகே தனியாா் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா், 70 போ் காயமடைந்துள்ளனா்.

Samayam Tamil Erode Accidetn

ஈரோடு மாவட்டம் கடகாநல்லியில் இருந்து பசுவனப்புரம் நோக்கி திங்கள் கிழமை காலை தனியாா் பேருந்து ஒன்று 70 பயணிகளுடன் சென்று கொண்டு இருந்தது. பேருந்து பங்களா மேடு பகுதி அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சவுந்தரராஜன் (25) என்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்தாா். விபத்து குறித்து தகவல் அறிந்த கடம்பூா் காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய நபா்களை பொதுமக்களின் உதவியுடன் மீட்டு அருகில் இருந்த சக்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தில் படுகாயமடைந்த 11 போ் உயா் மருத்துவ சிகிச்சைகளுக்காக கோவை மருத்துவக் கல்லூாி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றவா்களை ஈரோடு மாவட்ட ஆட்சியா் கதிரவன் மற்றும் பவானிசாகா் சட்டமன்ற உறுப்பினா் ஈஸ்வரன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆறுதல் கூறினா்.

அடுத்த செய்தி