ஆப்நகரம்

பி.ஹெச்டி. படிப்புக்கு ஈராக்கைச் சேர்ந்த 10 மாணவர்கள் விண்ணப்பம்!

மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. படிப்புக்கு ஈராக்கைச் சேர்ந்த 10 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Samayam Tamil 2 Mar 2019, 9:02 am
மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. படிப்புக்கு ஈராக்கைச் சேர்ந்த 10 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Samayam Tamil kamaraj.


ஈராக்கைச் சேர்ந்த 10 மாணவர்கள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 பேருக்கு ஏற்கனவே பயோ கெமிஸ்டரி (Department Of BioChemistry) மற்றும் வணிகம் (Department Of Commerce) ஆகிய பிரிவுகளில் இடம் கிடைத்துள்ளது. இது குறித்து மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கிருஷ்ணன் கூறுகையில், பல்கலைக்கழகத்தை வெளிநாட்டு மாணவர்களுக்கு கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அந்த வகையில், முதல் கட்டமாக ஈராக் மாணவர்களின் சமீபத்திய ஆர்வம் பல்கலைக்கழகத்திற்கு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளின் படி, நடப்பு நிதியாண்டில், 50க்கும் மேற்பட்ட ஈராக் மாணவர்கள் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்காக சேர்க்கை பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி