ஆப்நகரம்

வங்கிப் பணம் கொள்ளை: 10 தனிப்படை அமைப்பு

சென்னை ராயபுரத்தில் வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

TNN 31 Aug 2016, 8:41 am
சென்னை: சென்னை ராயபுரத்தில் வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக 10 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Samayam Tamil 10 special force set up for further investigation on bank money robbery
வங்கிப் பணம் கொள்ளை: 10 தனிப்படை அமைப்பு


வங்கிப் பணத்துடன் பயணம் செய்த பாதுகாவலர் சுரேந்தர், கார் ஓட்டுனர் நாராயணன், பணத்துக்கான பொறுப்பாளர் ஆனந்தனிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபேட்டையில் ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் இருந்து ரூ.15 லட்சம் கொள்ளைடிக்கப்பட்டது. கொள்ளை அடிக்கப்பட்ட பணம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமானது என்று தெரியவந்துள்ளது.

மண்ணடியில் உள்ள ஏடிஎம்மில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. பணத்தை ஏற்றிச் சென்ற வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் வேனை கடத்திச் சென்று பணத்தை கொள்ளையடித்துவிட்டு ராயபுரத்தில் நிறுத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 10 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி