ஆப்நகரம்

கனமழையால் 100 ஏக்கர் பயிர்கள் சேதம்.!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெய்த கனமழையால், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நாசமானது.

TNN 30 Oct 2017, 12:20 pm
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெய்த கனமழையால், நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் நாசமானது.
Samayam Tamil 100 acre irrigation land affect by heavy rain
கனமழையால் 100 ஏக்கர் பயிர்கள் சேதம்.!


கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த பங்களாபுதூர் வழியாக கட்டளை மேட்டு வாய்க்காலின், கிளை வாய்க்கால் செல்கிறது. சுமார் சுமார் 150 கிலோ மீட்டர் நீளம் செல்லும் இந்த வாய்க்கால் மூலம், 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்தது. இதனையோட்டி, நேற்று நள்ளிரவில் கரையில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறிய விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.

இதனால் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாகின.தற்போது வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பயிர்கள் சேதமடைந்துள்ளதால் கரூர் விவசாயிகள் விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.

100 acre irrigation land affect by heavy rain.

அடுத்த செய்தி