ஆப்நகரம்

ஒரளவுக்கு மன நிறைவு: மா.சுப்பிரமணியன் பேட்டி!

100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது ஒரளவுக்கு மன நிறைவு கொள்ளுகின்ற விஷயம் தான் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 21 Oct 2021, 10:17 pm
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் இளம் வயது கர்ப்பம் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே குண்டலபட்டி கிராமத்தில் நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். இன்று முதல் இம்மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் ஒரு மாத காலத்திற்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
Samayam Tamil மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்


நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் தற்போது 800 மாணவர்கள் சேர்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளது மீதமுள்ள 850 மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக கல்லூரிகளில் உள்ள கட்டமைப்புகள் குறித்து சில தகவல்கள் மத்திய அரசு கோரியிருந்தது அவை சரி செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது விரைவில் மத்திய குழு ஆய்வு செய்யப்பட்டு மொத்தமுள்ள 1650 மாணவர்கள் சேர்க்கைக்கான மருத்துவ இடங்கள் பெறும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.

நாடு முழுவதும் 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நாட்டின் மக்கள்தொகை 139 கோடி இவற்றில் நூறு கோடி என்பது 70 விழுக்காடாகும். 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மட்டும் 97 கோடி மக்கள் உள்ளனர் இவர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த 194 கோடி தடுப்பூசிகள் தேவை தற்போது 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருப்பது மன நிறைவு கொள்ளுகின்ற விஷயம் தான்.
நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்? வைகோ மகன் சொன்ன பதில்!
இருப்பினும் இது 50% தான். முழுமையாக தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே முழு மனநிறைவு ஏற்படும், என்றும் தமிழகத்தை பொறுத்தவரை நாளொன்றுக்கு இரண்டு கோடியே 72 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது தற்போது வரையில் 5 கோடியே 40 லட்சத்து 8 ஆயிரத்து 27 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது 68% முதல் தடுப்பூசி போட்டுள்ளனர் 28% இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் நாளை மறுநாள் 50 ஆயிரம் இடங்களில் ஐந்தாம் கட்ட தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது இவற்றில் 50 இலட்சம் மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செங்குட்டுவன் முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி