ஆப்நகரம்

'திமுக ஆட்சியில் 200 நாள் வேலைத்திட்டம், தடையில்லா உதவித்தொகை' - துரைமுருகன்

திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

Samayam Tamil 3 Jan 2021, 6:42 pm
தமிழகத்தில் எதிர்வரும் சட்ட சபை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாகி இறங்கியுள்ளன. திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை கிராம சபை கூட்டம் மூலமாக துவக்கியள்ளது. ஆட்சியில் உள்ள அதிமுக தேர்தல் பணிகளை முழு வீச்சில் இறங்கமுடியாத சூழலில், திமுக அதனை லாவகமாக பயன்படுத்தி கொண்டு முக்கிய நகரங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தி தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
Samayam Tamil file pic


இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற கிராம சபை கூட்டம் ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் நடந்தது. அப்போது, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து உரையாற்றிய துரைமுருகன், '' இன்னும் நான்கே மாதத்தில் திமுக கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் கிடப்பில் உள்ள உதவித் தொகை வழங்குவது மற்றும் புதிய பயனாளிகள் விண்ணப்பித்தவுடன் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் மேலும் ஒரு பொருள் சேர்ப்பு: சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்

மேலும், தற்போதைய 100 நாள் வேலை திட்டம் 200 நாட்களாக உயர்த்தப்படும். ஏழை எளிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வசதிகளும் கூடிய நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டும்'' என இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த செய்தி