ஆப்நகரம்

தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் 100 % அதிகரிப்பு: அதிர்ச்சி ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் 9,10ஆம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 6 Feb 2020, 8:32 am
பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்க மாநில அரசு இதற்கு முன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடையச் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
Samayam Tamil தமிழ்நாட்டில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிப்பு


இந்நிலையில் 5ஆம், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அரசு அறிவித்த பொதுத் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு தரப்புகளிலிருந்தும் கிளம்பிய எதிர்ப்பின் காரணமாக நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த தேர்வுகளை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி அரசாணை வெளியிட்டார்.

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து- அப்படியே மறக்காம இதையும் செஞ்சிடுங்க - அமைச்சர் உத்தரவு!

இந்நிலையில் நேற்று மக்களவையில் பள்ளியில் மாணவர்களின் இடைநிற்றல் தொடர்பாக பாஜக எம்.பி.க்கள் பி.பி.சௌத்ரி, சுதாகர் துகாரா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கரியால் பதிலளித்தார். தேசிய அளவில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் 2015-16ஆம் ஆண்டுகளில் 8.1 சதவீதமாக இருந்ததாகவும், 2016-17ஆம் ஆண்டுகளில் 10 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அடிப்படை வசதிகளை ஒழுங்கா செஞ்சுதாங்க... அரசுப் பள்ளிகளின் தரம் தானா உயரும்: கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அட்வைஸ்!!

ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் இடைநிற்றல் சதவீதம் குறைந்துள்ளதாக கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் 9,10ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2015-16ஆம் ஆண்டில் இடைநிற்றல் 8 சதவீதமாக இருந்த நிலையில் 2017-18ஆம் ஆண்டில் 16.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கோலாகலமாக நடைபெறும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு!

ஏழ்மை நிலை, குடும்ப பொருளாதாரம், மாணவர்களின் உடல்நிலை, பெற்றோர்களிடம் கல்வி குறித்த முக்கியத்துவம் இல்லாதது ஆகியவை மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்ததற்கான காரணங்களாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி