திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கால் மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். 156 ஏக்கர் பரப்பளவில் 7 பிரகாரங்கள் மற்றும் 21 கோபுரங்களுடன் இக்கோவில் அமைத்துள்ளது . மேலும் இக்கோவிலை பூலோக வைகுண்டம் என்றும் அழைப்பார்கள்.
இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தைப் போல உள்ள பிரசாதங்கள் தயாரிக்கும் பகுதியில் நூற்றுக்கால் மண்டபம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபம் நூறு ஆண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்ததும் கோவில் திருப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டது.கோவிலின் தென்கிழக்கு மூலையில் இந்த மண்டபம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த நூற்றுக்கால் மண்டபத்தை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. நூற்றுக்கால் மண்டபத்தை அதன் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
100-pillar-mandapam found in Srirangam temple