ஆப்நகரம்

பன்னீர்செல்வம் அணியில் மதிமுக-வினர் 1000 பேர்

மதிமுக-வினர் சுமார் 1000 பேர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.

TNN 25 Feb 2017, 2:10 am
சென்னை: மதிமுக-வினர் சுமார் 1000 பேர், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியில் இணைந்தனர்.
Samayam Tamil 1000 from mdmk joins ops camp
பன்னீர்செல்வம் அணியில் மதிமுக-வினர் 1000 பேர்


அதிமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், கட்டாயத்தின் பேரில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அதிரடி தெரிவித்தார். அது முதலே பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக பிளவு கண்டுள்ளது.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அப்போது, மதிமுக-வில் இருந்து விலகிய சுமார் 1000 பேர் பன்னீர்செல்வம் அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தமிழக அரசியல் சூழல் குறித்து மதிமுக தலைவர் வைகோ எந்த கருத்தும் கூறாமல் அமைதி காத்து வந்தார். இதனிடையே, சட்டப்பேரவையில் திமுக நடந்து கொண்ட முறை சரியில்லை என்றும், அதிமுக-வை மற்றவர்கள் அழிக்க விட மாட்டேன் என்றும் கருத்து தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து,அவரது கருத்துக்கு முரண்பட்ட அவர்கள் பன்னீர்செல்வம் அணியில் தங்களை இணைத்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.
1000 from MDMK joins OPS camp

அடுத்த செய்தி