ஆப்நகரம்

சேலத்தில் ரயிலை சிறைப்பிடித்த 1000 பேர் மீது வழக்கு பதிவு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

TNN 25 Jan 2017, 9:21 pm
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சேலத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Samayam Tamil 1000 people were detained damaging case against train salem
சேலத்தில் ரயிலை சிறைப்பிடித்த 1000 பேர் மீது வழக்கு பதிவு


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழன் என்ற உணர்வுடன் தமிழகம் முழுவது போராட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு சேலத்தில் நடந்த போராட்டத்தின் சேலம் டவுண் ரயில் நிலையத்தில் பெங்களூரு -காரைக்கால் பயணிகள் ரயிலை மறித்து சிறைப் பிடிக்கப்பட்டது.

இந்த ரயில் சிறைப்பிடிக்கப்பட்டதில், ரயில் எஞ்சினில் இருந்த லைட்,மின்விசிறி உள்ளிட்டப்பொருட்கள் திருடப்பட்டதாக சேலத்தை சேர்ந்த ராகவன், பிரகாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ரயில் சிறைப் பிடிக்கப்பட்டது தொடர்பாக 1000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி