ஆப்நகரம்

மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி, ஸ்டாலினுடன் நெகிழ்ச்சி சந்திப்பு!

கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மாள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார்.

Samayam Tamil 21 Sep 2018, 4:54 pm
கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மாள், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தார்.
Samayam Tamil Dnm9y4HV4AU5Oks
மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி, ஸ்டாலினுடன் நெகிழ்ச்சி சந்திப்பு!


கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டி ரங்கம்மாள். திமுகவின் தீவிர உறுப்பினரான இவர், 1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி பஞ்சாயத்து உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

இவருக்கு திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. ஆனால் அதற்குள் கருணாநிதி மறைந்துவிட அவரது இந்த ஆசை நிராசையாக மாறிவிட்டது.

இந்நிலையில்தான் ரங்கம்மாள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது. இதனையத்து இன்று சென்னை வந்த மூதாட்டி ரங்கம்மாள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ''மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்திக்க வேண்டிய எண்ணம் இருந்தது. ஆனால் சூழ்நிலை காரணமாக நிறைவேறாமல் போனது. ஆனால் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அது மிக மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று தெரிவித்தார்.

தற்போது ரங்கமாளுக்கு 103 வயதானாலும்கூட, இன்னும் இளமையுடன் விவசாய வேலைகளை செய்து, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்த செய்தி