ஆப்நகரம்

3ஆவது முறையாக தள்ளி வைக்கப்படுகிறது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; ஜூலையில் தேர்வு!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Samayam Tamil 8 Jun 2020, 2:30 pm
தமிழகத்தில் கொரோனா காரணமாக முதன்முறையாக தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது. மேலும், ஒத்தி வைக்கப்பட்ட பிளஸ்1 தேர்வுகள், ஊரடங்கால் 12ஆம் வகுப்பு தேர்வை எழுத முடியாமல் விடுபட்டவர்களுக்கான மறு தேர்வுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை இரண்டாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் எனவும், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம் வகுப்பு மறுதேர்வு ஜூன் 18ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதனிடையே, தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்து. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் ஜூன் 15ஆம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. எனவே, ஜூலை 2ஆவது வாரத்தில் தேர்வை நடத்தலாமா என பிற்பகல் 2.30 மணிக்கு தெரிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கும் முடிவை அரசே எடுத்தால் நன்றாக இருக்கும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.

டாஸ்மாக் கடைகளை திறப்பது போல் அல்ல பள்ளித்தேர்வு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதன் முடிவில், 10 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. அத்துடன், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 3ஆவது முறையாக ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி